ஜயிஸ் நடவடிக்கையில் எம்ஏசிசி அதிகாரிகள் இருவர் சிக்கினர்

சிலாங்கூர்   சமய   அதிகார  அமைப்பு(ஜயிஸ்)  எம்ஏசிசி    அதிகாரிகள்   இருவரைத்   தடுத்து   வைத்துள்ளது.

ஓர்  ஆணும்  தனித்துவாழும்  தாயாரான   பெண்ணும்  ஸ்ரீகெம்பாங்கான்   கொண்டோமினியத்தில்   அதிகாலை  மணி   மூன்றுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டதாக   தகவலறிந்த    வட்டாரமொன்று   கூறிற்று.

அவர்களில்  ஒருவர்   ஊழல்தடுப்பு   ஆணையத்தின்   பிரிவுகளில்   ஒன்றின்   இயக்குனர்    என்று   அது    தெரிவித்தது.

அச்சம்பவத்தை   உறுதிப்படுத்திய   ஜயிஸ்   வட்டாரமொன்று   அதன்மீது   விசாரணை   நடைபெற்று   வருவதாகக்  கூறியது.