‘நிறைய ஊழல்கள்’ நிகழ்வதாகக் கூறி அதற்கான ஆதாரங்களை எம்ஏசிசி-இடம் ஒப்படைத்தார் அஸ்மின் சகோதரர்

தொலைக்காட்சிப்  பிரபலம்  அஸ்வான்  அலி  ஒரு  தலைவர் “நிறைய  ஊழல்கள்  செய்து  செல்வச்  செழிப்பில்   மிதப்பதாக”க்  குற்றஞ்சாட்டி   அதற்கான   ஆதாரங்களை  எம்ஏசிசி-இடம்   கொடுத்திருக்கிறார்.  ஊழல்  தலைவரின்   பெயரை   அவர்  குறிப்பிடவில்லை.

ஆனால்,  அவரின்  இன்ஸ்டாகிராமைப்  பார்க்கும்போது    அவர்   கொடுத்த   ஆவணங்கள்  அவரின்   அண்ணன்   சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்   அலி  மீதும்   அவரின்   “அல்லக்கைகள்”  மீதும்   குற்றம்  சாட்டுபவையாக  இருக்கலாம்   என்று   தோன்றுகிறது,

“நான்  நிறைய    ஆதாரங்களைக்   கொண்டு   வந்துள்ளேன்.  ஆனால்,  கொஞ்சம்தான்   சொல்வேன்.

“அளவுமீறிய  ஊழல்,   செல்வச் செழிப்பு   குறித்துத்   தெரிவிக்க   (எம்ஏசிசி)  வந்துள்ளேன்.

“யார்(அந்தத்   தலைவர்)? அதைச்  சொல்ல   மாட்டேன்”,  என   எம்ஏசிசி    உதவி   ஆணையர் (நடவடிக்கை)  அஸாம்   பாகியைச்    சந்தித்த   பின்னர்   அஸ்வான்  கூறினார்.

அஸ்மான்   இதற்குமுன்    அண்ணன்  அஸ்மினின்  வீழ்ச்சிக்காக   அம்னோவுடன்  சேர்ந்து   பாடுபடப்  போவதாகவும்     அவரின்   அந்தரங்கங்களை   அம்பலப்படுத்தப்போவதாகவும்   கூறியிருந்தார்.