1எம்டிபி-இல் அருள் கந்தாவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது

அருள் கண்ட  கந்தசாமி  1எம்டிபி  தலைவராகவும்   தலைமை   செயல்  அதிகாரியுமாக   தொடர்ந்து   இருப்பார்   என்பதை   ஒரு   வட்டாரம்  உறுதிப்படுத்தியுள்ளது.

பணிக்காலத்தை   நீட்டிப்பது    தொடர்பில்   அவருடன்   நடத்தப்பட்ட  பேச்சுகள்  முடிவுக்கு   வந்திருப்பதாக   அது  கூறியது.  ஆனால்,  பணிக்காலம்   எதுவரை   நீட்டிக்கப்பட்டது   என்பதை   அவ்வட்டாரத்தால்  உறுதிப்படுத்த  முடியவில்லை.

2015  ஜனவரியில்  அரசாங்கத்தின்  முதலீட்டு   நிறுவனமான  1எம்டிபி   தலைவராக   அருள்  கந்தா  நியமிக்கப்பட்டார்.  2017  டிசம்பர்  31-இல்   அவரது  பணிக்காலம்   முடிவுக்கு   வருவதாக  இருந்தது.

1எம்டிபி   தலைவர்  பதவிக்கு  வருமுன்னர்    அவர்   அபு  டாபி   கமர்சியல்   பேங்க்     உதவித்  தலைவராகவும்   அதன்  முதலீட்டுப்   பிரிவுத்   தலைவராகவும்   இருந்தார்.