ஜெருசலம் பாலஸ்தீனத்தின் தலைநகராக அங்கீகரிக்கப்பட வேண்டும், அன்வார் கோரிக்கை

 

ஜெருசலம் பாலஸ்தீனத்தின் தலைநகரகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு மலேசியா  ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார் மலேசிய் எதிரணியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.

அன்வாரின் வேண்டுகோள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்துள்ளதற்கு பதிலடியாகும்.

டிரம்ப்பின் இறுமாப்பான முடிவை நீதியை நேசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் கண்டிக்க வேண்டும் என்று கூறிய அன்வார், இதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி மலேசிய அரசாங்கத்தைத் கேட்டுக்கொண்டார்.

அமேரிக்காவின் முடிவை மலேசியா கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் மலேசியா ஜெருசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அன்வார் மலேசிய அரசாங்கத்தை வற்புறுத்தினார்.,