எச்எஸ்ஆர் குத்தகையைப் பெற மெகா-குழுமம் அமைக்கிறது சீனா

சீனாவின்  இரயில்வே  துறை   கோலாலும்பூர்-சிங்கப்பூர்  அதிவிரைவு இரயில்  திட்டத்துக்கான   குத்தகையைப்  பெற   பல  நிறுவனங்களைக்  கொண்ட   மிகப்  பெரிய  இரயில்வே  குழுமம்  ஒன்றை  அமைக்கிறது.

அக்குழுமத்தில்,  சீன  இரயில்வே  கார்ப்பரேசன்(சிஆர்சி)    தலைமையில்     சீன  இரயில்வே   குரூப்,  சீன   இரயில்வே   கட்டுமான   கார்ப்பரேசன்,  சீன   கம்முனிகேசன்   கட்டுமான  நிறுவனம்,  சிஆர்ஆர்சி  கார்ப்பரேசன்  லிமிடெட்,  சீனா  முதலீட்டு   கார்ப்பரேசன்,  சீன  ஏற்றுமதி- இறக்குமதி   வங்கி   ஆகியவை  இடம்பெற்றிருப்பதாக   பெய்ஜிங்கிலிருந்து    வெளிவரும்  கேய்க்ஸின்  சஞ்சிகை   கூறியது.

நாளடைவில்  மேலும்  பல  நிறுவனங்கள்  அதில்  சேர்த்துக்கொள்ளப்படலாம்  என்றும்   அது   தெரிவித்தது.

எச்எஸ்ஆர்  திட்டத்திற்கான குத்தகையைப் பெற  ஜப்பான்,  தென்  கொரியா,  பிரான்ஸ்,  ஜெர்மனி   ஆகிய    நாடுகளின்    நிறுவனங்களும்   போட்டியிடுவதாக   சிஆர்சி   அதிகாரிகள்   கேய்க்ஸினிடம்   தெரிவித்தனர்.