பிஎன் சிறப்புக் கூட்டத்தில் தேர்தல் தேதி விவாதிக்கப்படவில்லை

நேற்றிரவு  கூடிய   பிஎன்  உச்சமன்றச்  சிறப்புக்   கூட்டம்   இட  ஒதுக்கீடுகள் குறித்தோ    14வது  பொதுத்   தேர்தல்    தேதி  குறித்தோ   விவாதிக்கவில்லை.

எதிர்வரும்   தேர்தலுக்கு   பிஎன்   தேர்தல்  இயந்திரத்தை   முடுக்கி  விடுவது   குறித்து   மட்டுமே   உச்சமன்றம்   கலந்துரையாடியது   என்று   அம்னோ   உதவித்   தலைவர்   ஹிஷாமுடின்  உசேன்  கூறினார்.

“தேர்தல்   தேதி  குறித்து   விவாதிக்கவில்லை,  பொதுவாக   தேர்தலுக்கு   ஆயத்தமாவது   பற்றி   மட்டுமே   பேசப்பட்டது”,  என  ஹிஷாமுடின்  செய்தியாளர்களிடம்     தெரிவித்தார்.

பங்காளிக்  கட்சி  பேராளர்கள்  அனைவருமே   கலந்துகொண்ட   அக்கூட்டம்   நன்கு  நடைபெற்று  முடிந்தது    என்றாரவர்.