அன்வார் ஜூன் 11 இல் விடுதலை பெறுகிறார்

 

தகாத உறவுக்காக ஐந்தாண்டு சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜூன் 11 இல் விடுதலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிதிகளுக்கு ஏற்ப, அன்வார் ஜூன் 11 இல் விடுவிக்கப்படுவார் என்று வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்று காஜாங்கில் பக்கத்தான் ஹரப்பான் பெண்கள் மாநாட்டில் கூறினார்.

இம்மாநாட்டில் 1,000 பெண் பேராளர்கள் பங்கேற்றுள்ளனர். இன்றுடன் அன்வார் 1,602 நாள்களை அரசியல் கைதியாக சிறையில் கழித்துள்ளார் என்று அசிஸா கூறினார்.