கடலடிச் சுரங்கத் திட்டம் தொடர்பில் இரு ‘டத்தோக்கள்’ கைது

பினாங்கு  மாநில  அரசின்  கடலடிச்  சுரங்கத்  திட்டம்  மீதான   ஊழல்    விசாரணையின்  தொடர்பில்   ‘டத்தோ’  பட்டம்  பெற்ற  இருவர்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று   அத்தீவில்  மேற்கொள்ளப்பட்ட    அதிரடிச்  சோதனையைத்   தொடர்ந்து   அவர்கள்  கைது   செய்யப்பட்டதாக  எம்ஏசிசி    துணைத்  தலைமை   ஆணையர்(நடவடிக்கை   பிரிவு)  அஸாம்  பாகி  தெரிவித்தார்.

“இரண்டு  டத்தோக்கள்  கைதானார்கள்”,  என்றாரவர்.

“இருவரும்  வெவ்வேறு   நிறுவனங்களைச்   சேர்ந்தவர்கள்.  அவர்களை  விசாரணைக்காக   தடுத்துவைக்க   நீதிமன்ற  உத்தரவுக்கு  மனு   செய்திருக்கிறோம்”,  என்றவர்   தெரிவித்தார்.