மகாட்சிர் ‘தந்தைபோல் அறிவுரை’ கூறினாரே தவிர அரசு ஊழியர்களைப் பணிவிலகச் சொல்லவில்லை

கல்வி  அமைச்சர்  மகாட்சிர்  காலிட்    அரசு   அதிகாரிகள்    அரசாங்கம்  குறித்துக்    கருத்துரைக்கும்போது   சிந்தித்துப்  பேச   வேண்டும்  என்று          ‘தந்தைபோன்று’   அறிவுரைதான்   கூறினார்  என  அமைச்சரின்  ஊடக  மற்றும்  தொடர்பு  அலுவலகம்   கூறியது.

“ஊடகங்களில்   அறிவிக்கப்பட்டிருப்பதைப்போல்   அவர்  பேசவில்லை,  பிள்ளைகளுக்குத்    தந்தை  சொல்வதுபோன்று   அறிவுரைதான்   கூறினார்  என்பதை    வலியுறுத்த  விரும்புகிறோம்.

“அரசாங்கப்   பணியில்   இருப்பதால்     அவர்கள்    அரசாங்கம்  குறித்து   முடிவெடுக்கும்போதும்    அறிக்கை  விடும்போதும்  ‘விவேகமாக’  நடந்துகொள்ள   வேண்டும்  என்றுதான்   அறிவுரை    கூறினார்”,  என  மகாட்சிரின்  ஊடக   அலுவலகம்   கூறிற்று.