அமனா கூற்றுக்கு மறுப்பு, சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் இடஒதுக்கீடு பேச்சுகளை நடத்தி வருகிறது

சிலாங்கூர்  பக்கத்தான்  ஹரபானில்   14வது  பொதுத்  தேர்தலுக்கு    இடஒதுக்கீடுகள்   செய்வதுமீதான   பேச்சுகள்   நடைபெற்று   வருவதாகக்  கூறுகிறார்  அதன்   செயலாளர்   ஸுரைடா  கமருடின்.

“14வது பொதுத்   தேர்தலுக்கு  மாநில   அளவில்   இடஒதுக்கீடு  செய்வதுமீதான   பேச்சுகளை  பிகேஆர்  தலைமையில்  சிலாங்கூர்   பக்கத்தான்  ஹரபான்   நடத்தி   வருகிறது.

“இதுவரை   சிலாங்கூர்  பக்கத்தான்  ஹரபான்  தேர்தல்  குழு    ஸ்ரீஅண்டாலாஸ்   சட்டமன்ற  உறுப்பினர்   சேவியர்    ஜெயகுமார்  தலைமையில்   நான்கு   தடவை  கூட்டங்கள்   நடத்தப்பட்டுள்ளன”,  என   பிகேஆர்    மகளிர்  தலைவியுமான  ஸுரைடா    இன்று   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

சிலாங்கூர்    அமனா    தொடர்பு  இயக்குனர்    ஜம்சுரி   அர்டானி   சிலாங்கூரில்  இடஒதுக்கீடு  குறித்து  விவாதிக்க   குழு   எதுவும்    இதுவரை   அமைக்கப்படவில்லை    என்று   கூறியிருப்பதற்கு   எதிர்வினையாற்றியபோது  அவர்  இவ்வாறு   கூறினார்.

சிலாங்கூரில்  பாஸுடன்  அரசியல்   ஒப்பந்தம்   செய்துகொள்ள  பிகேஆருக்குள்  “இரகசிய   பேச்சு”   நடப்பதாகவும்   அவர்  சொன்னார்.