டென்னிஸ் சங்கத்திலிருந்து அதன் புரவலர் சித்தி ஹஸ்மா நீக்கம்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்   முகம்மட்டின்  துணைவியார்   டாக்டர்   சித்தி   ஹஸ்மா   மலேசிய   சக்கர  நாற்காலி   சங்கப்  புரவலர்  பொறுப்பிலிருந்து   நீக்கப்பட்டார்.

டிசம்பர்  28  என்று   தேதியிடப்பட்ட    அச்சங்கத்தின்   கடிதம்   ஜனவரி  22-இல்  சித்தி  ஹஸ்மாவின்   அலுவலகத்தில்  கொண்டு  வந்து  கொடுக்கப்பட்டதாக   அவரின்  உதவியாளர்  ரோஸ்லினா  ஜமாலுடின்  மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

சங்கம்,   அதன்    டிசம்பர்  மாதச்    செயலவைக்  கூட்டத்தில்,  சங்கத்தை  மேம்படுத்த   அதன்   நிர்வாகக்   குழுவைத்   திருத்தி  அமைக்க   தீர்மானம்   கொண்டு   வரப்பட்டதாகக்  கடிதத்தில்   குறிப்பிட்டிருந்தது.

“அதைப்  படித்துப்  பார்த்த  சித்தி    ஹஸ்மா  ‘அதற்கென்ன  பரவாயில்லை’   என்றார்” ,  என  ரோஸ்லினா  கூறினார்.

இவ்விவகாரம்    குறித்து  சித்தி  ஹஸ்மாவின்   புதல்வி   மரினா  மகாதிர்     டிவிட்டரில்  கருத்துரைத்திருந்தார்.

“என்ன  ஒரு   சின்னப்புத்தி”,  என்றவர்   குறிப்பிட்டிருந்தார்.