மரியா சின் தேர்தலில் போட்டியிடுவார்

பெர்சே  தலைவர்   மரியா   சின்  அப்துல்லா  14வது   பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்  ஹரப்பான்   வேட்பாளராகத்    தேர்தலில்    குதிக்கிறார்.

அது   குறித்து   நாளை    செய்தியாளர்  கூட்டமொன்றில்   அவர்  முறைப்படி     அறிவிப்பார்.

எந்தக்   கட்சி    சார்பாக    அவர்   போட்டியிடுவார்    என்பது    தெளிவாக   தெரியவில்லை.

அது   பற்றிக்   கேட்டதற்கு    நாளைய    செய்தியாளர்   கூட்டத்தில்   விளக்குவதாக  சொல்லிவிட்டார்.

“பெர்சே  2.0-இலிருந்து  விலகி     அரசியல்   களத்தில்   ஒரு   புதிய   சவாலை   எதிர்கொள்ள     முடிவு   செய்து  விட்டேன்”,  என்றாரவர்.

மரியா,   பெட்டாலிங்   ஜெயா   செலாதான்   நாடாளுமன்றத்     தொகுதியில் ,  பிகேஆர்   கட்சி    சார்பில்   போட்டியிடுவார்    என்று   ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.