அடுத்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் மகாதிர்-ரபிடா-டைம் சூறாவளி!

 

அடுத்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் நடைபெறவிருக்கும் ஒரு பெரிய செராமாவில் அம்னோ முன்னாள் அமைச்சர்கள் ரபிடா அசிஸ் மற்றும் டைம் ஸைனுடின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று மலாக்கா பிகேஆர் தலைவர் சம்சூல் இஸ்கந்தர் முகமட் அகின் அறிவித்துள்ளார்.

அன்றிரவு மலாக்கா மாநில சட்டமன்ற தொகுதி புக்கிட் கட்டிலில் (முன்பு புக்கிட் பாரு) பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் உரையாற்றும் நிகழ்ச்சியில் அவர்களும் கலந்துகொள்வார்கள் என்று அவர் கூறினார்.

முன்னாள் அனைத்துலக வாணிக மற்றும் தொழில் அமைச்சரான ரபிடா கடந்த மாதங்களில் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சமீப காலம் வரையில் மௌனமாக இருந்து வந்த முன்னாள் நிதி அமைச்சர் டைம் தற்போது பக்கத்தான் ஆதரவு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.