பொன்னான வாய்ப்பை’ வீணாக்காமல் விவேகமாக வாக்களிப்பீர்: கடல்படைத் தலைவர் வீரர்களுக்கு அறிவுறுத்து

‘கடல்படை     வீரர்கள்   விவேகமாக   வாக்களிக்க    வேண்டும். இது  ஒரு  ‘பொன்னான  வாய்ப்பு’.  இதை  வீணாக்கி  விடக்  கூடாது   என்று   கடல்படைத்   தலைவர்   எட்மிரல்   அஹமட்   கமருல்ஜமான்   அஹமட்   படாருடின்    கேட்டுக்கொண்டிருக்கிறார்.

வீரர்கள்     குடும்பத்தோடு   சென்று   முன்னேரத்திலேயே    வாக்களிக்க   வேண்டும்.   அவர்களின்   வாக்குகள்  “இரகசியமானவை”  என்றவர்   நினைவுறுத்தினார்.

சரியான   தேர்வு   செய்வதற்கு   அஞ்ச   வேண்டியதில்லை.

“வாக்களிக்கும்போது  யாரை   வேண்டுமானாலும்    தேர்ந்தெடுக்கும்   உரிமை   நமக்குண்டு.

“எந்தத்   தூண்டுதலுக்கும்  ஆட்பட்டு   முடிவெடுக்கக்  கூடாது.

“பொறுப்பான   மலேசியர்கள்     என்ற    முறையில்   விவேகமாக   வாக்களியுங்கள்.  நம்   வாக்குகள்   இரகசியமானவை     என்பதை  நினைவில்  வைத்துக்கொள்ளுங்கள்”,  என்றவர்   வலியுறுத்தினார்.

“இந்தப்   பொன்னான   வாய்ப்பை  விட்டுவிட்டால்   அது   ஒரு   இழப்பாகும்”,  என்றாரவர்.