போலீஸ்: மூசா, ஜமால் இரகசியமாக வெளியேறி விட்டனர்

 

முன்னாள் சாபா முதலைமைச்சர் மூசா அமான் மற்றும் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் ஆகிய இருவரும் நாட்டிலிருந்து இரகசியமாக வெளியேறி விட்டனர் என்று நம்பப்படுவதாக போலீஸ் கூறிக்கொள்கிறது.

புருனை வழியாக மூசா தப்பி விட்டார் என்று போலீஸ் கருதுவதாக போலீஸ் படைத் தலைவர் ஃபூஸி ஹருணை மேற்கோள் காட்சி பெர்னாமா செய்தி கூறுகிறது.

ஜமாலும் இரகசியமாக இந்தோனேசியாவுக்குள் நுழைந்து விட்டதாக போலீஸ் நம்புகிறது. இதையும் ஃபூஸிதான் தெரிவித்ததாக பெர்னாமா கூறுகிறது.

போலீஸ் இந்தோனேசிய அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது. அவர்களின் உதவியுடன் ஜமால் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஃபூஸி மேலும் கூறியுள்ளார்.