1எம்டிபி ஜெட் விமானம் அதனிடம் இருப்பதாக சிங்கப்பூர் கூறுகிறது, ஆனால்…

 

1எம்டிபி விசாரணையில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஜெட் விமானம் சிங்கப்பூர் செலத்தார் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீஸ் கூறுகிறது.

அந்த சிங்கப்பூர்-டாலர் 35 மில்லியன் தனிப்பட்ட ஜெட் விமானம் சிங்கப்பூரில் இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் இதற்கு முன்பு உறுதிப்படுத்தியதில்லை.

அந்த விமானம் வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமானதாகக் கருதப்பட்டாலும், அந்த விமானத்தை பிரதமர் மகாதிர் ஒரு சொத்தாக மீண்டும் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும், அந்த விமானம் திருப்பி அனுப்பப்படுவதற்கு முறையான வேண்டுகோள் எதுவும் இன்னும் மலேசிய அதிகாரிகளிடமிருந்து பெறப்படவில்லை என்று சிங்கப்பூர் போலீஸ் கூறியது.