ரோஸ்மாவின் வைரங்கள், ரிம100 மில்லியன் ரொக்கம், ‘அதிர்ச்சியில்’ நஸ்ரி

 

முன்னாள் பிரதமர் நஜிப், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோரைப் பற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளவை மீது எதிர்வினையாற்றிய முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ், “அதிர்ச்சி” அளிக்கிறது என்று கூறினார்.

பல்வேறான விவகாரங்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. நான் அரசாங்கத்தில் இருந்த போது அவற்றைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார் நஸ்ரி.

“ரோஸாவின் நகைகள் பற்றி எனக்குத் தெரியாது, எஸ்ஆர்சி இண்டர் நேசனல் பற்றி எனக்குத் தெரியாது … நான் அமைச்சராக இருக்கும் போது பணம் மற்றும் ஜோ லா பற்றி எனக்குத் தெரியாது, அது வெளிப்படுத்தப்படவில்லை”, என்று நஸ்ரி நாடாளுமன்ற முகப்பில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

அதனால், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள 1எம்டிபி மீதான விசாரணையை தாம் ஆதரிப்பதாக நஸ்ரி கூறினார்.