1எம்டிபி விசாரணையை மறுபடியும் தொடங்கக் கோரும் கோரிக்கையை குவான் எங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

 

தலைமைக் கணக்காய்வாளர் (ஆடிட்டர் ஜெனரல்) மற்றும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஎசி) 1எம்டிபி ஊழல் மீதான விசாரணையை மறுபடியும் தொடங்கக் கோரும் கோரிக்கையை நிதி அமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த கோரிக்கையில் அவ்விசாரணை சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அக்கோரிக்கை மக்களவையின் இன்றைய செயல் அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

நிதி அமைச்சரின் கோரிக்கை மக்களவை அமர்வின் கடைசி நாளான நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.