குவான் எங் விடுவிக்கப்பட்டது மீது ஒரு வழக்குரைஞர் விசாரணை கோருகிறார்

 

நிதி அமைச்சர் லிம் குவான் எங் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிருந்து விடுவிக்கப்பட்டதற்கு சட்டத்துறை தலைவர் அலுவகம் அளித்திருந்த விளக்கத்தை நிராகரித்த ஒரு வழக்குரைஞர், இந்த வழக்கு கைவிடப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குணமலர் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஜே. குணமலர் சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் இந்த வழக்கை மேல்முறையீடு செய்வதற்கு மனு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கெபலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸால் மரைக்கான் நைனா மரைக்கான் இந்த விடுவித்தல் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நேற்று இது போன்ற கோரிக்கை விடுத்திருந்தார்.