அந்த நபரின் கையை கடித்த பிறகு, மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
“இரவு 8.25 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த மாணவரை அணுகியதாக கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்தார்.”
நேற்று இரவு கெடா, அலோர் ஸ்டார் அருகிலுள்ள பெக்கான் சிம்பாங் குவாலாவில் இரண்டாம் படிவம் பயிலும் மாணவி ஒருவர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பினார்.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் சையத் பஸ்ரி சையத் அலி கூறுகையில், இரவு 8.25 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அந்த மாணவியை அணுகியதாகத் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட மாணவி நகரத்திலுள்ள ஒரு சந்து வழியாக நடந்து சென்றபோது, சந்தேக நபர் தனது மோட்டார் சைக்கிளை அவருக்கு முன்னால் நிறுத்தி, அவரைப் பிடித்து கைகளால் அவரது முகத்தை மூடினார்”.
சந்தேக நபரின் கையை கடித்ததன் மூலம் அந்த மாணவி அங்கிருந்து தப்பினார். அவர் உதவி கோரி அருகில் உள்ள ஒரு பயிற்சி மையத்திற்கு ஓடினார்,” என்று சையத் பஸ்ரி கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கடத்தலுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363, குற்றங்களைச் செய்ய முயற்சிப்பது தொடர்பான பிரிவு 511 மற்றும் 2017 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
“சம்பவம் நடந்த இடத்திலிருந்து தடயவியல் மாதிரிகளை சேகரிக்க கெடா காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் உதவியையும் நாங்கள் நாடியுள்ளோம்”.
“சந்தேக நபரைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
























