நாடாளுமன்றத்தில் புகைபிடித்த எம்பிக்கு தண்டம்

நாடாளுமன்றத்தில் புகைபிடித்த, ஒரு எம்பி உள்பட, எண்மருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் புகைபிடிக்கக் கூடாத இடம் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மட் அறிவித்ததை அடுத்து அங்கு புகைபிடித்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

“நாடாளுமன்றக் கட்டிடம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. அதற்காக 23-இலிருந்து 25 அதிகாரிகளை அமர்த்தியுள்ளோம்”, எனச் சுகாதார அமைச்சின் புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அரியானா ஹசான் கூறினார்.

ஆனால், புகைபிடித்ததற்காக தண்டம் விதிக்கப்பட்ட எம்பி யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.