கெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய் லெக்

பிஎன்னிலிருந்து விலக  முடிவெடுத்த கெராக்கானுக்கு மசீச-வைவிட துணிச்சல் அதிகம் என மசீச முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறினார்.

மே 10 இல், 14வது பொதுத் தேர்தலில் பிஎன் பெரும் தோல்விகண்டபோதே மசீச அக்கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்றாரவர்.

“கெராக்கானுக்குத் துணிச்சல் அதிகம். நெருக்கடியான நேரத்தில் தீர்க்கமான முடிவெடுத்த அதன் தலைவர்களைப் பாராட்டுகிறேன்.

“பிஎன், பெருமையுடன் சொல்லிக்கொள்ளக் கூடிய பெயராக இப்போது இல்லை”,என சொய் லெக் மலேசியாகினி நேர்காணல் ஒன்றில் கூறினார்.