குழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று சரியே என்கிறது ஸ்பான்

தேசிய நீர்ச்சேவை ஆணையம்(ஸ்பான்), நம் நாட்டுக் குழாய் நீரை அப்படியே குடிக்கலாம், ஆபத்தில்லை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் கூறியதை ஆதரிக்கிறது.

“குழாய் நீரை நேரடியாக அருந்தலாம் என்று சேவியர் அண்மையில் டேவான் ரக்யாட்டில் கூறியதை ஸ்பான் அப்படியே ஆதரிக்கிறது.

“உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள தரத்துக்கு ஏற்ப மலேசியாவில் குடிமக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது”, என ஸ்பான் தலைமை செயல் அதிகாரி முகம்மட் ரித்துவான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

நீர் பாதுகாப்பாகவும் தரமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சும் ஸ்பானும் தொடர்ந்து பரிசோதனைகள் செய்கின்றன என்றும் அவர் சொன்னார்.