ஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை

பிகேஆர் தேர்தல்: தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று வாக்களிப்பு நடைபெற்ற நெகிரி செம்பிலானிலும் மலாக்காவிலும் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வழக்கமாக வாக்களிப்பு நடைபெறும் நாளில் அன்றைய இரவே தேர்தல் குழு முடிவுகளை அறிவித்து விடும்.

குழுத் தலைவர் ரஷிட் டின்னைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது நெகிரி செம்பிலானில் ஒரு தொகுதியும் மலாக்காவில் ஆறில் ஐந்து தொகுதிகளும் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இன்று பெர்லிசிலும் சிலாங்கூரிலும் பிகேஆர் கட்சித் தேர்தல்கள் நடக்கின்றன. பிரச்னை ஏதுமில்லை என்றால் முடிவுகள் இன்றிரவே தெரிந்து விடும்.