ஹிஷாம்: சீனா செல்வேன், லோ லோ-வைக் கொண்டு வருவேன்

1எம்டிபி விவகாரத்துக்கு ஒரு முடிவுகாண விரும்பும் ஹிஷாமுடின் உசேன், அதற்காக தொழிலதிபர் லோ லோ-வை-  அவர்  எங்கு மறைந்திருந்தாலும்-   தேடிப் பிடித்துவர முன்வந்தார்.

யாருடைய கோரிக்கையுமின்றி தாமே இப்பணியைச் செய்ய முன்வருவதாக முன்னாள் தற்காப்பு அமைச்சர் கூறினார்.

“1எம்டிபி விவகாரம் முடிவுக்கு வர வேண்டும், நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

“ஜோ லோ சீனாவில் இருந்தால் நானே நேரில் அங்கு சென்று அவரை அழைத்து வந்து நீதிமுன் நிறுத்துவேன். அவர் வெளிநாட்டில் இருக்கும்வரை 1எம்டிபி விவகாரம் முடிவுக்கு வராது.

“சீன அரசாங்கத்துடன் எனக்குப் பழைய தொடர்பு உண்டு……லோ சீனாவில் இருப்பது உண்மையென்றால் அவர் திருப்பி அனுப்பப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவேன்”, என ஹிஷாம் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.