மலாக்கா முன்னாள் சிஎம் அம்னோவிலிருந்து நாளை வெளியேறுகிறார்

 

மலாக்காவின் முன்னாள் முதலமைச்சர் அம்னோவிலிருந்து விலகப் போகிறார் என்பதை நாளை ஒரு நிகழ்ச்சியில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரித்தா ஹரியான் கூற்றுப்படி, இந்த முன்னாள் முதலமைச்சர் மலாக்காவின் “மேம்பாட்டு தந்தை”.

மலாக்காவின் முதலைமைச்சராக 1999-லிருந்து 2013 வரையில் பதவியிலிருந்த முகமட் அலி ருஸ்தாம் வழக்கமாக இவ்வாறு அழைக்கப்பட்டார்.

இவருடன் இன்னும் பலர் வெளியேறக்கூடும் என்று வட்டாரங்களைச் சுட்டிக் காட்டி பெரித்தா ஹரியான் செய்தி கூறுகிறது.

செப்டெம்பரில், மலாக்காவின் ஐந்தாவது முதலமைச்சர் முகமட் அடிப் முகம்மட் அடாம் பெர்சத்துவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து 10-ஆவது முதலமைச்சர் இட்ரீஸ் ஹருண் அம்னோவிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.