ஜோ லவ்-வை கண்டுபிடிக்க சீன அதிகாரிகளுடன் போலீஸ் சந்திப்பு

 

ஒளிந்து கொண்டிருக்கும் தொழில் வணிகர் ஜோ லவ்-வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மலேசிய போலீஸ் சீன அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் முகமட் பூசி ஹருண் இன்று கூறினார்.

விபரங்கள் எதுவும் அளிக்காமல், ஜோ லோ இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றாரவர். போலீஸ் இன்டர்போலுடனும் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் நிலைமையில் மாற்றமில்லை என்று அவர் கெந்திங் மலையில் இன்று கூறினார்.

கடந்த வியாழக்கிழமை, அரசாங்கம் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைத் தொடரும் என்று கூறிய பிரதமர் மகாதிர், அதில் சிரமங்கள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

1எம்டிபி விவகாரத்தில் பெரும்புள்ளி என்று அமெரிக்கா மற்றும் மலேசிய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ள ஜோ, ஹோங்காங் சிறையிலிருந்து மகாவுக்கு அருகிலுளுள்ள ஒரு தீவுக்கு தப்பித்து விட்டதாக நம்பப்படுகிறது.