நஜிப்: அல்டான்துயாவைச் சந்தித்ததில்லை. அவரின் உறவினர் சொல்வது பொய்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,  கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துயாவைச் சந்தித்ததே இல்லை என்று அடித்துக் கூறினார்.

“சந்தித்தேன் என்பது அவதூறு. பொய். அவரை நான் பார்த்ததே இல்லை”, என கேமரன் மலையில் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக உள்ள நஜிப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏற்கனவே ஒரு பள்ளிவாசலில் இது தொடர்பாக சத்தியம் செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அல்டான்துயாவின் உறவினர் இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் குறித்துக் கருத்துரைத்தபோது நஜிப் அவ்வாறு கூறினார்.