திரெங்கானு சுல்தான் தலைமையில் ஆட்சியாளர் கூட்டம்

16வது பேரரசரையும் துணைப் பேரரசரையும் தேர்ந்தெடுப்பதற்காக கூடியுள்ள ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டத்துக்கு திரெங்கானு ஆட்சியாளர் சுல்தான் மிர்சான் சைனல் அபிடின் தலைமை தாங்குகிறார்.

இன்று காலை 11.15க்குத் தொடங்கிய அக்கூட்டத்தில் ஒன்பது மாலாய் ஆட்சியாளர்களில் எண்மர் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 6-இல் பேரரசர் பதவியிலிருந்து விலகிய கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

15வது பேரரசராக இருந்த சுல்தான் ஐந்தாம் முகம்மட் பதவி விலகியதை அடுத்து புதிய பேரரசரைத் தேர்ந்தெடுப்பதற்காகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டம்.

இப்போது துணைப் பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷா பேரரசரின் பணிகளைக் கவனித்துக் கொள்கிறார்.

-பெர்னாமா