ரந்தாவில் நான்கு முனைப் போட்டி

ரந்தாவ் இடைத் தேர்தலில் நால்வர் போட்டியிடுகின்றனர்.

அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், பிகேஆரின் எஸ்.ஸ்ரீராம், சுயேச்சைகளான முகம்மட் நோர் யாசின், மலர் ராஜாராம் ஆகியோரே அந்நால்வருமாவர்.

முகம்மட் , உள்ளூர் மக்களுக்கு நன்கு தெரிந்த பெயரான “தோக் மாட்” என்ற பெயரை வாக்குச் சீட்டிலும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

முகம்மட் யாசின் முன்னாள் ஆசிரியர், விரிவுரையாளர். இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டை ஊக்குவிக்க விரும்புகிறவர்.

மலர் ராஜாராம் ஒரு குடும்பத் தலைவி.

ரந்தாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பு நாள் ஏப்ரல் 13. முன்கூட்டிய வாக்களிப்பு ஏப்ரல் 9.