‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவது வதந்தி- தொழிலதிபர்

தொழில் அதிபர் ஜி.ஞானராஜாவுக்குக் கொடுக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ பட்டத்தை பகாங் மாநில அரசு பறித்துக்கொண்டதாகக் கூறும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மார்ச் 13 எனத் தேதியிடப்பட்ட அக்கடிதத்தில் மாநிலச் செயலாளர் சலேஹுடின் ஈஷாக், 2014-இல் தொழிலதிபருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீசுல்தான் அஹமட் ஷா விருது உடனடியாக இரத்துச் செய்யப்படுவதாகக் கூறியிருந்தார்.

ஞானராஜா அவ்விருதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் சலேஹுடின் குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்பில் மலேசியாகினி இன்று காலை ஞானராஜாவை வினவியதற்கு அவர் டத்தோஸ்ரீ பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

“நான் இன்னமும் ஒரு டத்தோஸ்ரீதான். அது (கடிதம்) வதந்தி, என்றார்.