கருத்துச் சொல்லும் உரிமை சிறாருக்கும் உண்டு

கருத்துத் தெரிவிக்கவும் பொதுப் பேரணிகளில் கலந்துகொள்ளவும் சிறாருக்கும் உரிமை உண்டு என்பதை அனவரும் மதிக்க வேண்டும். பினாங்கு மாச்சாங் புபோக் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் இதை வலியுறுத்தினார்.

பினாங்குத் தீவு மாநகராட்சி மன்ற (எம்பிபிபி) கவுன்சிலர் வினோதினி சந்திரஹாசன் பருவ நிலை மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறார்கள்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருப்பது குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.