அமைச்சரவையின் திறந்த இல்ல உபசரிப்பு, ராயா முதல் நாளில், ஸ்ரீ பெர்டானாவில்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அமைச்சர்களும் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை, ராயாவின் முதல் நாளன்று புத்ரா ஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடத்துகிறார்கள்.

திறந்த இல்ல உபசரிப்பு காலை மணி 10 தொடங்கி மாலை 4.30வரை நடக்கும் எனப் பிரதமர்துறை அறிக்கை ஒன்று கூறியது.

“பொதுமக்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். முறையான ஆடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”, என்று அவ்வறிக்கை கூறிற்று.

புத்ரா ஜெயாவில் மூன்று இடங்களிலிருந்து- புத்ரா செண்ட்ரல், துவாங்கு மிர்ஸான் சைனல் அபிடின் பள்ளிவாசல், புத்ரா பள்ளிவாசல்- ஸ்ரீபெர்டானாவுக்கு இலவச பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பேருந்துகளில் ஸ்ரீ பெர்டானா செல்லலாம்.