நான்கு ஆவாஸ் கேமராக்கள்தான் செயல்படுகின்றனவா? மறுக்கிறது ஆர்டிடி

ஒரு செய்தித்தளத்தில் நெடுஞ்சாலைகளில் சாலைப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஆவாஸ் கேமராக்களில் நான்கு மட்டுமே வேலை செய்வதாக வெளிவந்த தகவலைச் சாலைப் போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) மறுக்கிறது.

ஆர்டிடி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 41 ஆவாஸ் கேமராக்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் எல்லாமே வேலை செய்வதாகவும் கூறிற்று.

அந்த அறிக்கையின்படி ஆவாஸ் கண்காணிப்பு முறையை ஆர்டிடி எடுத்துக்கொண்ட பிறகு 2019 மே வரையில் 169,051 சம்மன்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அந்தச் செய்தித் தளம் ஆர்டிடி கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆவாஸ் கண்காணிப்பு முறை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு 45 கேமராக்களில் நான்கு மட்டுமே வேலை செய்து வருவதாகக் கூறியிருந்தது.