அம்னோ-பாஸ் கூட்டணி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் மாநிலங்களுக்கு முழு எண்ணெய் உரிமத் தொகை

15வது பொதுத் தேர்தலில் அம்னோ-பாஸ் கூட்டணி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றி ஆட்சி அமைக்குமானால் எண்ணெய் உற்பத்தி செய்யும் எல்லா மாநிலங்களுக்கும் எண்ணெய் உரிமத் தொகை முழுமையாகக் கொடுக்கப்படும் என்று அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்தார்.

“இப்போது திரெங்கானு, கிளந்தான் போன்றவை கேட்பதுபோன்ற உரிமத் தொகை அல்ல, சரவாக், சாபா, திரெங்கானு, கிளந்தான், பகாங்குக்கும் மற்ற மாநிலங்களுக்கும் முழு உரிமத் தொகையே வழங்குவோம்”, என்றாரவர்.

ஜாஹிட், இன்று திரெங்கானு அம்னோ மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்