Ops Selamat 16/2020 – 14 நாட்களில் 215 இறப்புகள்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியதிலிருந்து ஓப்ஸ் செலாமட்/Ops Selamat 16/2020, 14 நாட்களில் மொத்தம் 215 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்களில் முதலிடத்தில் உள்ளனர் என்றும் (139 பேர்), 191 அபாயகரமான விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் அஜிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.

இறந்தவர்களின் பதிவில், சிலாங்கூரில் 35 பதிவும், ஜொகூர் (34), பஹாங் மற்றும் சரவாக் (முறையே 20), கிளந்தான் 18 என்ற பதிவுகள் உள்ளன.

இந்த காலகட்டத்தில், 21,941 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சிலாங்கூரில் 6,162 பதிவாகியுள்ளன, ஜோகூர் (3,367), கோலாலம்பூர் (2,469), பேராக் (1,833), பினாங்கு (1,761), நெகிரி செம்பிலன் (1,070), கெடா (1,003) ஆகிய பதிவுகள் உள்ளன.

இதற்கிடையில், பகாங் (936), மலாக்கா (821), சரவாக் (713), சபா (663), கிளந்தான் (466), தெரெங்கானு (424), மற்றும் பெர்லிஸ் (73) ஆகிய இடங்களில் சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 373,212 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 235,966 வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துவது, போக்குவரத்து விளக்குகளை பின்பற்றாதது, வேக வரம்புகளை மீறி வாகனம் ஓட்டுவது, அவசர பாதைகளைப் பயன்படுத்துதல், வரிசையை முந்துவது மற்றும் இரட்டைக் கோடுகளில் முந்துவது தொடர்பான குற்றங்களுக்காக சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • பெர்னாமா