போலீஸ் போக்குவரத்து, தளவாடத் துறை 13வது பொதுத் தேர்தலுக்கு தயார்

அண்மைய எதிர்காலத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் 13-வது பொதுத் தேர்தலுக்கு போலீஸ் போக்குவரத்து தளவாடத் துறை தயாராக இருக்கிறது.

இவ்வாறு புக்கிட் அமான் போக்குவரத்து தளவாடத் துறையின் இயக்குநர் சுல்கிப்லி அப்துல்லா கூறுகிறார்.

பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான சாதனங்கள், நிதிகள் குறித்து தமது துறை தற்போது உள்துறை அமைச்சுடன் பேச்சு நடத்துவதாகவும் அவர் சொன்னார்.

‘பொதுத் தேர்தலுக்கான தேவைகள் பற்றி போக்குவரத்து தளவாடத் துறையும் மற்ற துறைகளும் தங்களுக்குள் விவாதித்துள்ளன. நாங்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறோம். பொதுத் தேர்தல் எப்போது நிகழும் என்பதற்கு சரியான சமிக்ஞைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்றார் அவர்.

2010-ம் ஆண்டுக்கான போலீஸ் போக்குவரத்து தளவாடத் துறையின் சிறந்த சேவை விருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வில் சுல்கிப்லி பேசினார்.

கோலாலம்பூர் புக்கிட் அமானில் நிகழ்ந்த அந்த நிகழ்வின் போது 110 போலீஸ்  அதிகாரிகளுக்கும் சிவிலியன் ஊழியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

-பெர்னாமா