அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி

உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியைவிட அமெரிக்காவில் அதிகம் பேர் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது இந்த தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது சற்று ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தாலும், இன்னும் உயிரிழப்புகளின் உச்சத்தை அமெரிக்கா எட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு, பின்னர் குறையத் தொடங்கும் என்றும், மே ஒன்றாம் தேதி வாக்கில் ஒரு நாளில் 970 உயிரிழப்புகள் என்ற வண்ணம் எண்ணிக்கை சரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான நியூயார்க்கிலும் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக அதன் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்துள்ளார்.

BBC.TAMIL