இன்னும் 14 சிவப்பு மண்டலங்கள் உள்ளன, பெர்லிஸ் முழுவதும் பசுமை மண்டலமாகியது

சுகாதார அமைச்சின் சமீபத்திய தகவல்கள், கோவிட்-19 செயலில் உள்ள பாதிப்புகளுடன் 14 மாவட்டங்கள் இன்னும் சிவப்பு மண்டலங்களாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.

இதற்கு முன்னர் மொத்தம் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக இருந்தன.

பெர்லிஸ் முழுவதும் இப்போது ஒரு பசுமை மண்டலமாக உள்ளது.

சிவப்பு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள பகுதியாக, 347 பாதிப்புகளுடன் லெம்பா பந்தாய் உள்ளது; கூச்சிங் 217 பாதிப்புகளுடன் உள்ளது; பெட்டாலிங் 106 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.