கோவிட்-19: ஐந்து புதிய பாதிப்புகள், 11 மீட்புகள்

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா ஐந்து புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதனால், இன்றுவரை மொத்தம் 8,668 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மேலும் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,476 ஆக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்ட ஐந்து புதிய பாதிப்புகளில், மூன்று வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகளின் இறக்குமதி பாதிப்புகள் ஆகும். அதில், இரண்டு பாதிப்புகள் மலேசியர் சம்பந்தப்பட்டவை. ஒன்று, மலேசியர் அல்லாதவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) சம்பந்தப்பட்டது ஆகும்.

உள்நாட்டு பரவலின் இரண்டு பாதிப்புகள் பின்வருமாறு:

  • கோலாலம்பூர் : மலேசியர் அல்லாதவர் சம்பந்தப்பட்ட ஒரு பாதிப்பு
  • சிலாங்கூர் : மலேசியர் சம்பந்தப்பட்ட ஒரு பாதிப்பு

அனைத்து புதிய பாதிப்புகளும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன.

இந்த வளர்ச்சியின் விளைவாக மலேசியாவில் மொத்தம் 71 செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன.

இரண்டு நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கும் சுவாச உதவி தேவைப்படுகிறது.

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 121 ஆக உள்ளது. புதிய இறப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் நூர் ஹிஷாம் அறிவித்தார்.