8 மணி நேர மூன்றாவது சுற்று விசாரணையில் லிம்

பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் தனது மூன்றாவது சுற்று விசாரணையை இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக முடித்தார்.

RM6.3 பில்லியன் மதிப்புமிக்க பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இன்று எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டார்.

இப்போதைக்கு, சாட்சியமளிக்க லிம் மீண்டும் நாளை அழைக்கப்பட மாட்டார் என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

லிம் தனது வழக்கறிஞரான ஆர்.எஸ்.என் ராயருடன் இரவு 7 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திலிருந்து புறப்பட்டார்.

காலையில் இருந்து கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர்கள் தொடர்ந்து வாகனத்திற்குள் நுழைந்தனர்.

இந்த திட்டம் குறித்து சாட்சியமளிக்க அவர் மூன்றாவது முறையாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்துள்ளார்.