நாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்.  

இந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது வெளியுறவு மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் அமர்வில் மின்புகை VAPING) பிடித்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இது கடந்த திங்கள் கிழமை நடந்தது.

“மன்னிக்கவும், நான் உணரவில்லை – இது ஒரு புதிய பழக்கம்.” என்று அவர் டிவிட்டர் வழியாக அந்த மன்னிப்பை பதிவு செய்தார்.

“நான் நாடாளுமன்றத்திடம் மன்னிப்பு கேட்கிறேன், அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்திதில், எந்தவொரு உறுப்பினரும் உட்கார்ந்திருக்கும் போது அறையில் புகைபிடிக்கக்கூடாது.

பக்காத்தான் ஹரப்பன் ஆட்சியின் போது, ​​வாப்பிங் தடையை அமல்படுத்துவது இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிகோடின் இல்லாமல் திரவ தீர்வுகளை (மின்-திரவ) பயன்படுத்தும் மின்னணு சிகரெட்டுகள் (ஈ-சிகரெட்டுகள்) அல்லது வேப் விற்பனைக்கு இது தடை விதித்தது.