இன்று 3,780 புதிய நேர்வுகள், 36 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 3,780 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது.

இன்று 36 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,902 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 3,990 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 272 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,275), சரவாக் (405), கெடா (363), கிளந்தான் (357), கோலாலம்பூர் (342), ஜொகூர் (224), பினாங்கு (187), பஹாங் (159), மலாக்கா (122), பேராக் (115), சபா (87), நெகிரி செம்பிலான் (70), திரெங்கானு (58), லாபுவான் (7), புத்ராஜெயா (7), பெர்லிஸ் (2).

மேலும் இன்று, 11 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 4 கல்வி நிறுவனங்கள் சார்ந்தவை.