17,150 புதிய நேர்வுகள், 160 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,150 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 160 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,184- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 11,326 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,059 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 531 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6326), கோலாலம்பூர் (2086), கெடா (1511), ஜொகூர் (1045), சபா (1002), நெகிரி செம்பிலான் (809), பினாங்கு (752), பேராக் (693), மலாக்கா (686), பகாங் (676), சரவாக் (578), கிளந்தான் (459), திரெங்கானு (429), புத்ராஜெயா (72), பெர்லிஸ் (21), லாபுவான் (5).

மேலும் இன்று, 23 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.