இந்தோனீசியாவில் தடுப்பூசி பற்றாக்குறை

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் பெரும்­பா­லோர் தடுப்­பூசி போட்­டுக் கொள்ள ஆர்­வ­மு­டன் உள்­ள­னர். ஆனால் போது­மான தடுப்­பூ­சி­கள் இல்லை. இத­னால்­தான் பலர் தடுப்­பூசி போடா­மல் உள்­ள­னர்.

தடுப்­பூசி போட்­டுக்கொள்ள ஆர்­வம் இருந்­தும் இன்­ன­மும் தடுப்­பூசி போடா­த­வர்­க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் அவர்­களில் எண்­பது விழுக்­காட்­டி­னர், தடுப் பூசிக்கு முன்­ப­திவு செய்­யக் காத்தி ருப்­ப­தா­கக் கூறியுள்ளனர்.

உடல்­நிலை, போக்­கு­வ­ரத்து வசதி போன்ற இதர கார­ணங் களா­லும் அவர்­க­ளால் தடுப்­பூசி போட்­டுக்கொள்ள முடி­ய­வில்லை.

கடந்த மாதம் புள்­ளி­யியல் துறை இந்த ஆய்வை நடத்­தி­யது. இதர 4.2 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூ­சி­யின் ஆற்­றல் குறித்து சந்­தே­கம் தெரி­வித்தனர். 15.8 விழுக்­காட்­டி­னர் பக்க விளை­வு­கள் ஏற்­ப­ட­லாம் என்று கவலை தெரி­வித்­த­னர்.

கொள்­ளை­நோய்க்கு நாள்­ தோறும் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் உயிரிழந்து வரு­வ­தால் தடுப்­பூசி போடுவதை அர­சாங்­கம் தீவி­ர­மாக்கியுள்­ளது.

அமெ­ரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடு­களில் தடுப்­பூ­சி­கள் இருந்­தா­லும் சிலர் போட்­டுக் கொள்ள மறுக்­கின்­ற­னர்.

இந்­தோ­னீ­சியா போன்ற வள­ரும் நாடு­கள் தடுப்­பூசி இல்லாததால் பெரி­தும் பாதிக்­கப்பட்­டுள்­ளன.

அமெ­ரிக்­கா­வில் 50 விழுக்காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர். அந்­நாட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்­தோ­னீ­சி­யா­வில் எட்டு விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில் ஆகஸ்ட் மற்­றும் செப்­டம்­பர் மாதத்­தில் நாளுக்கு குறைந்­தது 2.5 மி. தடுப்­பூ­சி­களை போட இந்­தோ­னீ­சிய திட்­ட­மிட்டு உள்­ளது.

இம்­மாத இறு­திக்­குள் தலைநககர் ஜகார்த்தாவிலும் சுற்­றுலா நகரமான பாத்­தா­மிலும் 100 விழுக்­காடு தடுப்­பூசி போடப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் புடி குனாடி சடி­கின் நம்­பிக்கை தெரிவித்­துள்­ளார்.

ஒரு முறையா அல்­லது இரண்டு முறையா என்­பது குறித்து அவர் விளக்கவில்லை.

பெரும்­பா­லான கொவிட்-19 மர­ணங்­கள் தடுப்­பூசி போடா­த­தால் ஏற்­பட்­டுள்­ளது என்று அவர் குறிப் பிட்டார். ஜகார்த்­தா­வில் உள்ள ஒரு பொது மருத்­து­வ­ம­னை­யில் மேற் கொள்­ளப்­பட்ட சிறிய ஆய்­வில் கிரு­மித்தொற்­றால் மர­ண­ம­டைந்த 89 பேரில் 88 பேர் தடுப்­பூசி போடா­த­வர்­கள் என்­பது தெரிய வந்­துள்­ளது. மார்ச் முதல் ஜூன் வரை­யில் மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட 928 பேரிடம் ஆய்வு நடத்தப் பட்டது.

(நன்றி Tamil murasu)