உணவுக்காக தவிக்கும் 2.6 கோடி ஷாங்காய் மக்கள் – மீண்டும் சீனாவை மிரட்டும் கொரோனா!

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளதால், அங்குள்ள சுமார் 2.6 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

உலகளவில் கொரோனா பெருந்தொற்று தாக்கம் தற்போது ஓய்ந்துள்ள நிலையில், சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் முக்கிய பொருளாதார மையமாகக் கருதப்படும் ஷாங்காய் மாகாணத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாகாணத்தில் உள்ள சுமார் 2.6 கோடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர்.

 

 

News18