ரிம 50,000 விலைகொண்ட மரப் பாலம் – ஊழல் அற்றதாம்

மலேசிய ஊழக் தடுப்பு ஆணையம், சரவாக்கின் மீரியில்(Miri) உள்ள கம்போங் முதாப்பில் கட்ட பட்ட ரிம 50,000 விலை கொண்ட மரத்தாலான ஜெட்டியை கட்டுவதில்  எந்த ஊழலையும் கண்டுபிடிக்கவில்லை என்கிறது..

ஊழல் தடுப்பு  ஆணையத்தின் ஆதாரங்களின்படி, அதன் தலைமையகம் சரவாக் பொதுப்பணித் துறையின் (PWD), கீழ் கட்டப்பட்ட இந்த திட்டத்தை ஆய்வு செய்யுமாறு சரவாக்கில் உள்ள அதன் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

“இதைத் தொடர்ந்து, அவர்கள் சோதனைகளை மேற்கொண்டனர், மேலும் திட்டத்தில் லஞ்சம் அல்லது மோசடியின் எந்த கூறுகளும் இல்லை,” என்று ஒரு ஆதாரம்  மலேசியாகினியிடம் தெரிவித்தது.

எம்ஏசிசி மூத்த விசாரணை  இயக்குனர் ஹிஷாமுதீன் ஹாஷிம் (Hishamuddin Hashim) இந்த முடிவை உறுதிப்படுத்தினார், ஆனால் விவரிக்கவில்லை.

தரத்தின் மீது சந்தேகம்

சரவாக் PWD , கம்போங் முதாப்பில் ஒரு புதிய மரத்தாலான ஜெட்டியை ஒப்படைப்பதைக் காட்டும் பல புகைப்படங்களை பதிவேற்றியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது, இது ரிம 50,000 செலவில் கட்டப்பட்டதாகும்.

பலகைகள் மற்றும் அதனுடன் கூடிய எளிய மரக் கட்டமைப்பிற்கு அரசாங்கம் செலுத்திய ரிம 50,000 விலை குறித்து பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை தற்காத்தது சரவாக் பொதுப்பணித்துறை. ஒரு அறிக்கையை வெளியிட்ட து, அதில் அங்குள்ள ஆற்றில் முதலைகள் இருப்பதாவும் அதனாலான  பாதுகாப்பு செலவுகளும், மிரியில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கம்புங் முடாப்பை அணுகுவதற்கான மோசமான சாலைகளை கடப்பதையும்   அடங்கும் என்று கூறியது.

சரவாக் பொதுப்பணித்துறையின் கூற்றுப்படி, பொருட்களின் விலையானது பெலியன் மரங்களின் மீட்டர் கனசதுரத்திற்கு ரிம9,000 என்ற துறையின் அட்டவணை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது, இது உண்மையில் சந்தை விகிதத்தை விடக் குறைவாக உள்ளது என்று அது கூறியது.

இருப்பினும், இந்த விளக்கம் சரவாக் பக்காத்தான் ஹராப்பானுக்கு போதுமானதாக  இல்லை என்றது . அது ஊழல் தடுப்பு ஆணையம் இந்த  திட்டத்தை விசாரிக்க வலியுறுத்தியது.