சீனாவைக் கட்டுப்படுத்த ஒன்றுகூடும் நாடுகள்

தோக்­கியோ: ஆசி­யா­வில் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் தென்­கொ­ரி­யா­வில் இருந்து புறப்­பட்டு நேற்று மாலை ஜப்­பான் சென்று சேர்ந்­தார்.

ஜப்­பானியப் பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வு­டன் இன்று பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு முன், ஜப்பானியப் பேர­ர­சர் நரு­ஹிட்­டோவை பைடன் சந்­திப்­பார் என்று கூறப்­ப­டு­கிறது. கிஷி­டா­வு­ட­னான சந்­திப்­பின்­போது ஜப்­பா­னின் ராணு­வத் திறன்­களை விரி­வு­ப­டுத்­து­வது, அதி­க­ரித்து வரும் சீனா­வின் ஆதிக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­க­ளைப் பற்றி விவா­திப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அப்­போது, இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தார பங்­க­ளிப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டத்தை பைடன் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ளார்.

விநி­யோக சங்­கிலி, தூய எரி­சக்தி, உள்­கட்­ட­மைப்பு, மின்னிலக்கம் ஆகியவற்­றின் மூலம் வட்­டார நாடு­களை மிக நெருக்­க­மாக இணைக்­கும் நோக்­கம் கொண்­டது இத்­திட்­டம். ஆனால், இந்தத் திட்­டம் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் உள்ள நாடு­க­ளுக்­குச் சொற்ப பல­னைத்­தான் அளிக்­கும் என்ற விமர்­ச­னங்­களும் எழுந்­துள்­ளன.

முன்­ன­தாக, தென்­கொ­ரி­யா­வில் இருந்து புறப்­ப­டு­வ­தற்கு முன் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த பைடன், வட­கொ­ரி­யா­வின் புதிய அணு­வாயுதச் சோத­னை­கள் பற்றி தமக்கு கவ­லை­யில்லை என்று கூறி­னார்.

பைட­ன் தென்­கொ­ரி­யா­வில் இருந்­த­போது, வட­கொ­ரியா ஏவு­கணை அல்­லது அணு­வா­யுதச் சோத­னை­யில் ஈடு­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

 

 

Tamilmurasu