புயலுக்கு 8 பேர் பலி; இருளில் லட்சக்கணக்கான வீடுகள்

டொராண்டோ: கன­டா­வில் புயல் பாதிப்­பால் எட்­டுப் பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

லட்­சக்­க­ணக்­கான வீடு­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தால் நாட்­டின் பல்­வேறு பகு­தி­களும் இரு­ளில் மூழ்­கி­யுள்­ளன.

அத­னைச் சரி செய்­யும் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கன­டா­வின் ஒண்­டா­ரியோ, கியூ­பெக் உள்­ளிட்ட கிழக்கு மாநி­லங்களில் கடு­மை­யான சூறா­வ­ளிப் புயல் தாக்­கி­யது. அப்­போது, இடி, மின்­ன­லு­டன் பலத்த மழை­யும் பெய்­தது.

ஏறக்­கு­றைய இரண்­டரை மணி நேரம் வீசிய புய­லின்­போது மணிக்கு 132 கி.மீ. வேகத்­தில் பலத்த காற்று வீசி­யது.

இதன் கார­ண­மாக, அங்­குள்ள பல்­வேறு பகு­தி­க­ளி­லும் மரங்­கள் வேரோடு சாய்ந்­தன. மின்­கம்­பங்­களும் சாய்ந்­தன. இத­னால் நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் போக்கு­வ­ரத்து கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாநி­லங்­கள் உள்­ளிட்ட பகு­தி­களில் உள்ள ஒன்பது லட்­சம் வீடு­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்டு இரு­ளில் மூழ்­கின. இந்­தப் புயல், மழை தொடர்­பான விபத்­து­களில் சிக்கி 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க­வும் பலர் காய­ம­டைந்­துள்­ள­தா­க­வும் கனடா அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் மீட்­புப் பணி­களை அந்­நாட்டு அரசு முடுக்கி விட்­டுள்­ளது.

“புயல் பாதிப்­பால் பல்­வேறு நக­ரங்­களில் மின் இணைப்­பு­கள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன. மரங்­கள் சாய்ந்து விழுந்­த­தன் கார­ண­மா­க­வும் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டுள்­ளது,” என அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதுகுறித்து பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரூடோ வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், “தேவைப்­ப­டு­வோ­ருக்கு உதவி செய்ய அரசு தயா­ராக உள்­ளது. பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் நாங்­கள் கவ­னத்­தில் கொண்­டுள்­ளோம். மின் விநி­யோ­கம் சீர­மைப்பு பணி­களில் ஈடு­பட்­டுள்ள ஊழி­யர்­க­ளுக்கு நன்றி­,” எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

 

 

Tamilmurasu