விலங்குகளிடம் இருந்து பரவும் உயிர்கொல்லி காய்ச்சல்; ஈராக்கில் 19 பேர் மரணம்

ஈராக்­கில் மூக்­கி­லி­ருந்து ரத்­தம் கசிந்து மக்­கள் சாகக்கூடிய அள­வுக்கு மோச­மான காய்ச்­சல் ஒன்று பரவி வரு­கிறது.

கிரை­மி­யன்-கோங்கோ ரத்­தக்­கசி­வுக் காய்ச்­சல் என்ற அந்­தக் காய்ச்­சல் விலங்­கு­க­ளி­லி­ருந்து மனி­தர்­க­ளுக்­குப் பர­வக்கூடி­யது.

இந்த ஆண்டு ஈராக்­கில் 111 பேருக்கு அந்த காய்ச்­சல் ஏற்­பட்டு உள்ளது. அவர்­களில் 19 பேர் மாண்டுவிட்டதாக உலகச் சுகா­தார நிறு­வ­னம் கூறி­யது.

இந்த கிரு­மித்­தொற்­றுக்குத் தடுப்­பூசி ஏதும் இல்லை. நோய் விரை­வாக முற்­றக்­கூ­டி­யது. உட­லில் உள்­ளே­யும் வெளி­யே­யும், குறிப்­பாக மூக்­கி­லி­ருந்து, ரத்­தக் கசிவு ஏற்­படும்.

நோய் தொற்­றி­ய­வர்­களில் 40 விழுக்­காட்டினர் வரை இறக்­கக் கூடும் என்று மருத்­துவ உத­வி­யாளர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஆடு, மாடு, எருமை போன்ற விலங்­கு­க­ளின் தோலில் உள்ள நுண்கிருமியால் இந்­த நோய் பரவுகிறது.

அதே போல விலங்­கு­களை அறுக்­கும்­போது அவற்­றின் திசுக்­களோ ரத்­தமோ பட்­டால்­கூட மனி­தர்­க­ளுக்­குக் கிருமி பர­வ­லாம்.

கொவிட்-19 தொற்­று­டன் ஒப்­பி­டும்­போது தொற்று எண்­ணிக்கை மிக மிகக் குறைவு என்­றா­லும் ஈராக்­கிய அதி­கா­ரி­கள் கிரு­மிப்­பரவல் பற்­றிய கவ­லை­யில் உள்­ள­னர்.

 

 

Tamilmurasu